Tuesday, October 11, 2016

தாய்மை எனும் இயற்கை



தாய்மை எனும் இயற்கை
- இயற்கை சிகிச்சையாளர் ச.காளிமுத்து , 9865023320
குழந்தையின் தொப்புள் கொடியின் நீளம் தாய் குழந்தையை வாரியணைத்து தொப்புள் கொடியுடனேயே பால் கொடுக்கும் அளவில் இறைவனால் படைக்கப்பட்டது. அவ்வளவு நீளம் எதற்காக இறைவன் படைக்க வேண்டும். 
குழந்தைகள் பிறந்து வெளியுலகத்திற்காக தன்னை தயார் செய்து கொள்ளும் வரை தாயின் பாதுகாப்பு வேண்டியே. அதனாலேயே தொப்புள் கொடி கர்பப்பையிலிருந்து பிரிந்து வர தாமதமும் அது வரை பால் குடிக்கும் அளவிற்கு இயற்கையின் ஏற்பாடு. 
இதை புரிந்து கொள்ளாமல் பிறந்தவுடன் தொப்புள் கொடியை வெட்டி விடுகிறார்கள். 
அந்த சிறிது நேரம் தொப்புள் கொடியை வெட்டாமல் வைத்திருந்தால் என்ன நன்மை ? 
அதைப்பற்றி நவீன மருத்துவம் செய்யும் வியாபாரத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். அதாவது தொப்புள் கொடியை குழந்தை பிறந்த உடனேயே வெட்டி தொப்புள் கொடியை பாதுகாக்கும் வங்கியில் வைத்து விடுவார்கள். அதற்கான தொகையை உங்களிடம் வாங்கிக் கொள்வார்கள். வருங்காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்த தொப்புள் கொடியிலிருந்து மருந்துகள் தயாரிக்கும் ஆராய்ச்சி நடக்கிறது. ஏனெனில் தொப்புள் கொடியில் உள்ள ஸ்டெம் செல்கள் நோய்களை குணப்படுத்தும் வல்லமையை கொண்டுள்ளதாம். 
குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் ஸ்டெம் செல்கள் தொப்புளில் இருந்து குழந்தைக்கு தானே சென்று விடும். மேலும் ஸ்டெம் செல்கள் இறங்கியவுடனேதான் கர்பப்பையில் இருந்து இருந்து தொப்புள் கொடி விடுபடும். அப்பொழுதே குழந்தைக்கு கிடைக்க வேண்டிய ஒரு சத்துக்களை தடுத்து வருங்காலத்திற்காக என சொல்லி அதை பாதுகாக்கும் காரணம் வியாபாரம் மட்டுமே என்பதை சொல்ல வேண்டியதில்லை. 
எனவே இனியாவது பிறக்கும் குழந்தைக்கு தானே தொப்புள் கொடி விடுபடும்வரை காத்திருந்து தொப்புள் கொடியை வெட்டுங்கள். இவ்விசயத்தை அனைவருக்கும் பகிரவும். 
===============================
சென்னையில் 22, 23-10-2016 சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நமது உடலில் உள்ள நோய்கள் மற்றும் மருந்துகளிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெற உயிர் சக்தி இயற்கை மருத்துவ பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் 9865023320 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். 
தங்கள் பகுதியிலோ, கல்வி நிலையங்களிலோ, தொழில்நிறுவனங்களிலோ, சேவா சங்கங்களிலோ கீழ்க்கண்ட பயிற்சி வகுப்புகள் நடத்தவும் பயிற்சியில் கலந்து கொள்ளவும் தொடர்பு கொள்ளவும். 
* வள்ளுவரின் தமிழ் மருத்துவம் (திருவள்ளுவர் கூறும் தமிழர் வாழ்வியல் மருத்துவம்)
* உயிர் சக்தி இயற்கை மருத்துவம்
* நோயறிதல் கலை 
* யோக சிகிச்சை (மனநலம், உடல்நலம் இரண்டிற்குமான சிகிச்சை)
* பிராண சிகிச்சை 
* பஞ்ச பூத சிகிச்சை
* யோகா, சுவாசப் பயிற்சி (அனைவரும் தினசரி செய்யக் கூடிய எளிய பயிற்சி)
* குடும்ப நல்வாழ்வு நிகழ்ச்சி (வீட்டுத் தோட்டம், உணவு முறைகள், இயற்கை மருத்துவம், எளிய யோகாசனப் பயிற்சிகள் என குடும்ப நிகழ்ச்சி) 
* சர்க்கரை இல்லா பாரதம் (நீரழிவு நோயாளிகளுக்கான இயற்கை சிகிச்சை மற்றும் சிறப்பு யோகா பயிற்சி வகுப்பு)
மேலும் இயற்கை வாழ்வியல் ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்ச்சி நடத்தவும் தொடர்பு கொள்ளவும்.

No comments: